search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா தேர்தல் முடிவுகள்"

    • காங்கிரஸ் பெரும்பான்மையை கடந்து 119 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
    • பாஜக 75 தொகுதிகளிலும், மஜத 25 தொகுதிகளிலும், மற்றவை 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது.

    ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

    அதன்படி, காங்கிரஸ் பெரும்பான்மையை கடந்து 119 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து பாஜக 75 தொகுதிகளிலும், மஜத 25 தொகுதிகளிலும், மற்றவை 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

    இதனால், கர்நாடகவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் சூழலில் உள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத ஆட்சியமைக்க உரிமை கோட உள்ள நிலையில், கவர்னர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை என்றால் தர்ணா போராட்டம் நடத்துவோம் என இரு கட்சிகளும் அறிவித்துள்ளன. #KarnatakaVerdict #Congress #JDS
    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலில்  தனிப்பெரும் கட்சியாக பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. 104 இடங்களைக் பாரதீய ஜனதா கைப்பற்றி உள்ளது.  காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், மஜத கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. முல்பாகல் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளரும், ராணிபென்னூர் தொகுதியில் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளரும், ஒரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்று உள்ளனர். 

    இதனால் அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டு உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரிக்கை வைத்து உள்ளது. அதுபோல் பாஜகவும்  கவர்னரிடம் ஆட்சி அமைக்க கோரிக்கை வைத்து உள்ளது.

    கர்நாடகாவில் ஆட்சி அமைக்க  கவர்னர் பாஜகவை தான் அழைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இன்று மாலை மஜத தலைவர் குமாரசாமி காங்கிரஸ் தலைவர்களுடன் அம்மாநில கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.

    இதற்காக, எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து பெறும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுக்காவிடில் கவர்னர் இல்லம் முன்னதாக தர்ணா போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ், மஜத கட்சிகள் அறிவித்துள்ளன. எம்.பி.க்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜகவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்தால் சுப்ரீம் கோர்ட்டை நாடவும் காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
    ×